ரோமர் 6:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 பாவத்திற்கு அடிமையாயிருந்த மனித இயல்பு, அதன் வல்லமையை இழந்து போகும்படியாக, நம்முடைய பழைய மனிதன் கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டு இறந்துவிட்டான் என்பதை நாம் அறிவோம். இனி ஒருபோதும் நாம் பாவத்திற்கு அடிமைகளாக இராதபடிக்கே இப்படிச் செய்யப்பட்டது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 நாம் இனிப் பாவத்திற்கு அடிமையாக இல்லாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோவதற்காக, நம்முடைய பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 நம்முடைய பழைய மனித சுபாவம் கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டது என்பதை நாம் அறிவோம்; இதனால் பாவத்திற்கு அடிமையாயிருந்த உடல் அதன் வல்லமை இழந்துபோகும்; நாம் இனியொருபோதும் பாவத்திற்கு அடிமை இல்லை. See the chapterபரிசுத்த பைபிள்6 நமது பழைய வாழ்வு இயேசுவோடேயே சிலுவையில் கொல்லப்பட்டுவிட்டது என்று நமக்குத் தெரியும். எனவே, நமது பாவத் தன்மைகளுக்கு நம்மீது எவ்வித அதிகாரமும் இல்லை. இதனால் இனிமேலும் நாம் பாவங்களுக்கு அடிமையாக இருக்கமாட்டோம். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். See the chapter |