மாற்கு 9:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 அவர்கள் மலையிலிருந்து இறங்கி வருகின்றபோது இயேசு அவர்களிடம் மனுமகன் இறந்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும் வரைக்கும், அவர்கள் கண்டதை வேறு எவருக்கும் சொல்லக் கூடாது என்று உத்தரவிட்டார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் பார்த்தவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, மானிடமகனாகிய தான் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும் வரைக்கும், அவர்கள் பார்த்ததை வேறு ஒருவருக்கும் சொல்லக்கூடாது, என்று இயேசு அவர்களுக்கு உத்தரவிட்டார். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)9 avarhaɹl malaiyil irundhu ir̄anguhir̄a bōdhu, avar avarhaɹlai nōki: ‘manushahumāran marithoril irundhu eɹundhirukum varaikum, nīngaɹl kaɹndavaihaɹlai oruvarukum solla vēɹndām,’ endru kaɹtaɹlaiyiɹtār. See the chapterபரிசுத்த பைபிள்9 இயேசுவும், அவரது சீஷர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தனர். இயேசு தன் சீஷர்களிடம், “மலை மேலே பார்த்ததை நீங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள். மனித குமாரன் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்வரை காத்திருங்கள். பிறகு நீங்கள் பார்த்ததை மக்களுக்குச் சொல்லலாம்” என்று கட்டளையிட்டார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, அவர் அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். See the chapter |