மாற்கு 6:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 ஓய்வுநாளிலே அவர் அவர்களுக்கு ஜெபஆலயத்தில் போதிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட அநேகர் வியப்படைந்தவர்களாய், “இந்தக் காரியங்களை இவன் எங்கிருந்து பெற்றான்? இவனுக்குக் கொடுக்கப்பட்ட இந்த ஞானம் எப்படிப்பட்டது? இவனால் எப்படி இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய முடிகின்றது? See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 ஓய்வுநாளிலே, அவர் அவர்களுக்கு ஜெப ஆலயத்தில் போதிக்கத் தொடங்கினார். இயேசு சொன்னதைக் கேட்ட அநேகர் வியப்படைந்தார்கள். அவர்கள், “இவன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்? இவனுக்குக் கொடுக்கப்பட்ட இந்த ஞானம் எப்படிப்பட்டது? இவன் செய்யும் அற்புதங்கள் என்ன? See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)2 ōivunārlānabōdhu, jeba ālayathil ubadhēsampaɹnna thoɹdanginār. anēhar kēɹtu, āj̄ariyapaɹtu, ‘ivaihaɹl ivanuku engēyirundhu vandadhu? ivan kaihaɹlināl ipaɹdipaɹta balatha seihaihaɹl naɹdakumpaɹdi ivanuku koɹdukapaɹta gnānam epaɹdipaɹtadhu? ivan thaj̄an allavā? See the chapterபரிசுத்த பைபிள்2 ஓய்வு நாளானபோது ஜெப ஆலயத்தில் இயேசு உபதேசம் செய்ய ஆரம்பித்தார். நிறைய மக்கள் அதனைக் கேட்டு வியப்புற்றனர். அவர்கள் “இந்த மனிதர் இந்த உபதேசங்களை எங்கே இருந்து பெற்றார்? இந்த அறிவை எப்படிப் பெற்றார்? இவருக்கு இதனை யார் கொடுத்தது? அற்புதங்களைச் செய்யும் அதிகாரத்தை எங்கிருந்து பெற்றார்? See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? See the chapter |