Online Bible

- Advertisements -




மாற்கு 2:22 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

22 ஒருவனும் புதிய திராட்சை ரசத்தைப் பழைய தோற்பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அவன் அப்படி செய்தால், புதிய திராட்சை ரசம் பழைய தோற்பைகளை வெடிக்கச் செய்யும். அதனால் திராட்சை ரசம், தோற்பை ஆகிய இரண்டுமே பாழாய்ப் போகும். அதனாலே அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை ரசத்தைப் புதிய தோற்பைகளில் ஊற்றி வைப்பார்கள்” என்றார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால், புதிய இரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும் என்றார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. இல்லையென்றால், அந்த திராட்சை இரசம் தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசம், தோல் பை ஆகிய இரண்டுமே பாழாய்ப்போகும். அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும்.

See the chapter Copy

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

22 oruvanum pudhu thirāɹj̄arasathai paɹandhuruthihaɹlil vārthu vaika māɹtān: vārthu vaithāl, pudhurasam thuruthihaɹlai kiɹithupōɹdum, irasamum sindhipōm, thuruthihaɹlum keɹtupōm; pudhu rasathai pudhu thuruthihaɹlil vārthu vaika vēɹndum,’ endrār.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

22 எவனொருவனும் புதிய திராட்சை இரசத்தை பழைய தோல் பையில் ஊற்றி வைக்கமாட்டான். ஊற்றி வைத்தால் புதிய இரசம் பழைய பையைக் கெடுத்துவிடும். அதோடு இரசமும் சிந்திவிடும். புதிய இரசத்தைப் புதிய பைகளிலேதான் மக்கள் ஊற்றி வைப்பார்கள்” என்று சொன்னார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார்.

See the chapter Copy




மாற்கு 2:22

Follow us:

Advertisements


Advertisements