Online Bible

- Advertisements -




மாற்கு 2:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 பின்பு அவர் தொடர்ந்து நடந்து போகையில், அல்பேயுவின் மகனான லேவி, வரி சேகரிக்கும் இடத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அப்போது லேவி எழுந்து அவரைப் பின்பற்றிச் சென்றான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 அப்பொழுது அவர் நடந்துபோகும்போது, அல்பேயுவின் குமாரனாகிய லேவி வரிவசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து: என் பின்னே வாஎன்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்னேசென்றான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 பின்பு அவர் தொடர்ந்து நடந்துபோகையில் அல்பேயுவின் மகனான லேவி, வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அப்பொழுது லேவி எழுந்து, அவரைப் பின்பற்றிச் சென்றான்.

See the chapter Copy

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

14 avar naɹdandhu pōhaiyil, albēyuvin kumāranāhiya lēvi āyathur̄aiyil utkārndhirukir̄adhai kaɹndu: ‘enaku pinsendru vā,’ endrār; avan eɹundhu avaruku pinsendrān.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

14 கடற்கரையையொட்டி நடந்து செல்லும்போது அல்பேயுவின் குமாரனான லேவி என்னும் வரி வசூலிப்பவனைக் கண்டார். லேவி வரி வசூலிப்பு அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தான். அவனிடம் இயேசு “என்னைப் பின் தொடர்ந்து வா” என்றார். உடனே லேவி எழுந்து அவரைப் பின் தொடர்ந்தான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.

See the chapter Copy




மாற்கு 2:14

Follow us:

Advertisements


Advertisements