லூக்கா 1:35 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு35 அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார், அதி உன்னதமானவரின் வல்லமை உன்னை சூழ்ந்துகொள்ளும். எனவே பிறக்கப் போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், இறைவனின் மகன் என்றும் அழைக்கப்படுவார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார். See the chapterபரிசுத்த பைபிள்35 தூதன் மரியாளிடம், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னதமான தேவனின் ஆற்றல் உன்னை மூடிக்கொள்ளும். குழந்தை பரிசுத்தமுள்ளதாக இருக்கும். அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். See the chapter |