1 கொரி 2:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 ஒரு மனிதனுக்குள் இருக்கும் அவனுடைய ஆவியைத் தவிர அவனுடைய சிந்தனைகளை யாரால் அறிய முடியும்? அதேபோல் இறைவனின் ஆவியானவரைத் தவிர, ஒருவரும் இறைவனின் சிந்தனைகளை அறிய மாட்டார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 மனிதனிலுள்ள ஆவியேதவிர மனிதர்களில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவ ஆவியானவரைத்தவிர, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 ஒரு மனிதனுடைய சிந்தனைகள், அவனுக்குள் இருக்கும் ஆவிக்குத்தவிர வேறு யாருக்குத் தெரியும்? அதேபோல் இறைவனின் ஆவியானவரைத் தவிர, வேறு ஒருவரும் இறைவனின் சிந்தனைகளை அறியமாட்டார்கள். See the chapterபரிசுத்த பைபிள்11 அதை இப்படி விளக்கலாம்: ஒருவர் அடுத்தவருடைய எண்ணங்களை அறிய முடியாது. அவனுக்குள்ளிருக்கிற அவனுடைய ஆவியே அறியும். அதுவே தேவனுக்கும் பொருந்தும். தேவனுடைய ஆவியானவர்தான் அந்த எண்ணங்களை அறிவார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். See the chapter |