ரோமர் 3:28 - பரிசுத்த பைபிள்28 ஏனென்றால் ஒருவன் சட்டவழிகளின்படி வாழ்வதால் நீதிமானாக முடியாது; இயேசுவை விசுவாசிப்பதன் மூலமே நீதிமானாக முடியும். இதுவே நமது நம்பிக்கை. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 எனவே, மனிதன் நியாயப்பிரமாணத்தின் செயல்கள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்மானிக்கிறோம். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 ஏனெனில் ஒரு மனிதன் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே நீதிமான் ஆக்கப்படுகிறான் என்றே நாம் தீர்க்கிறோம். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 ஆகவே நீதிச்சட்டத்தால் வரையறுக்கப்படுகின்ற மனித முயற்சிக்கு அப்பாற்பட்டிருக்கின்ற விசுவாசத்தினாலேயே ஒருவன் நீதிமானாக்கப்படுகிறான் என்ற தீர்க்கமான முடிவுக்கு வருகின்றோம். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். See the chapter |