Online Bible

- Advertisements -




வெளிப்படுத்தல் 10:4 - பரிசுத்த பைபிள்

4 அந்த ஏழு இடிகளும் சொல்லச் சொல்ல நான் எழுதத் தொடங்கினேன். ஆனால் அப்போது பரலோகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அது “ஏழு இடிகளும் சொல்வதை நீ எழுதாதே. அவற்றை இரகசியமாய் மூடிவை” என்று சொன்னது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 அந்த ஏழு இடிகளும் தங்களுடைய சத்தங்களை முழங்கினபோது நான் எழுதவேண்டுமென்று இருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் அவைகள் இரகசியமாக இருக்க முத்திரைபோடு என்று வானத்திலிருந்து சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 அந்த ஏழு இடிமுழக்கங்கள் பேசியபொழுது, நான் அவற்றை எழுதுவதற்கு ஆயத்தமானேன்; ஆனால் பரலோகத்திலிருந்து ஒரு குரல், “ஏழு இடிகளும் சொன்னதை முத்திரையிடு, அதை எழுதவேண்டாம்” என்று சொன்னதைக் கேட்டேன்.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 அந்த ஏழு இடிமுழக்கங்கள் பேசியபோது நான் அவற்றை எழுதுவதற்கு ஆயத்தமானேன். ஆனால் பரலோகத்திலிருந்து ஒரு குரல், “ஏழு இடிமுழக்கங்களும் சொன்னதை முத்திரையிட்டு மறைத்து விடு, அதை எழுத வேண்டாம்” என்று சொன்னதைக் கேட்டேன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 அவ்வேழு இடிகளும், தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.

See the chapter Copy




வெளிப்படுத்தல் 10:4

Follow us:

Advertisements


Advertisements