எரேமியா 6:10 - பரிசுத்த பைபிள்10 நான் யாரோடு பேசுவேன்? நான் யாரை எச்சரிக்க முடியும்? நான் சொல்வதை யார் கேட்பார்கள்? இஸ்ரவேல் ஜனங்கள் தம் காதுகளை மூடிக்கொண்டார்கள். எனவே, எனது எச்சரிக்கைகளை அவர்களால் கேட்கமுடியாது. ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளை விரும்புகிறதில்லை, அவரது செய்தியை அவர்கள் கேட்க விரும்பவில்லை. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அவர்கள் கேட்கும்படி நான் யாருடன் பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய காது விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; யெகோவாவுடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 நான் யாரோடு பேசி எச்சரிக்கை கொடுப்பேன்? யார் எனக்குச் செவிகொடுப்பான்? கேட்க முடியாதபடி அவர்களின் காதுகள் மூடப்பட்டிருக்கின்றன. யெகோவாவின் வார்த்தை அவர்களுக்கு வெறுப்பாயிருக்கிறது. அதில் அவர்கள் மகிழ்ச்சி கொள்ளவில்லை. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை. See the chapter |