எபிரெயர் 9:11 - பரிசுத்த பைபிள்11 மேலும் இப்போது வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியனாகக் கிறிஸ்து வந்திருக்கிறார். (சாதாரண கூடாரத்தின் வழியே அவர் வரவில்லை). மனிதக் கைகளால் உருவாக்கப்படாத உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான கூடாரத்தின் வழியே வந்தார். அக்கூடாரமானது தேவன் உருவாக்கிய இவ்வுலகத்தின் பகுதியல்ல. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராக வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தப் படைப்பு சம்பந்தமான கூடாரத்தின்வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின்வழியாகவும், See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 நமக்கு வரவிருக்கிற நன்மைகளைக் கொடுக்கிற பிரதான ஆசாரியராய் கிறிஸ்து வந்தபோது, அவர் மேலானதும், நிறைவானதும், மனிதனால் செய்யப்படாததும், அதாவது இவ்வுலகப் படைப்பின் ஒரு பகுதியாக இல்லாத இறைசமுகக் கூடாரத்தின் வழியாகவே சென்றார். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 இப்போது நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள பெருநன்மைகளை அருளுகின்ற தலைமை மதகுருவாய் கிறிஸ்து வருகை தந்தபோது, அவர் மனிதனின் கரங்களினால் செய்யப்படாத அதாவது இவ்வுலகப் படைப்பின் ஒரு பகுதியாய் இல்லாத மேலானதும் நிறைவானதுமான இறைபிரசன்னக் கூடாரத்தின் ஊடாகவே சென்றார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும், See the chapter |