எபிரெயர் 5:1 - பரிசுத்த பைபிள்1 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் ஏனைய மனிதர்களுக்கு உதவும் பொருட்டு மனிதரின் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதனே ஆவான். காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும், மற்றும் மக்கள் தேவனுக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் அவன் செலுத்துகிறான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அன்றியும், மனிதர்களில் இருந்து தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த, மனிதர்களுக்காக தேவகாரியங்கள் செய்வதற்கு நியமிக்கப்படுகிறான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் மனிதரிடையே இருந்து தெரிந்தெடுக்கப்பட்டு, இறைவனுக்குரிய காரியங்களில், காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாய் நியமிக்கப்படுகிறான். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 இஸ்ரயேலர்களின் தலைமை மதகுரு ஒவ்வொருவரும் மனிதர்களில் இருந்து தெரிவு செய்யப்படுகிறார்கள். அவர்கள் இறைவனுக்கு காணிக்கைகளையும் பாவங்களுக்கான பலிகளையும் செலுத்துவதற்காக, இறைவனுக்குரிய விடயங்களில் மக்களின் சார்பாக சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அன்றியும், மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான். See the chapter |