Online Bible

- Advertisements -




2 கொரி 5:1 - பரிசுத்த பைபிள்

1 பூமியில் வாழ்வதற்குக் கிடைத்த கூடாரம் போன்ற நம் சரீரம் அழியக் கூடியது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது நிகழும்போது தேவன் நாம் வாழ்வதற்கென்று ஓர் இடம் வைத்துள்ளார். அது மனிதர்களால் அமைக்கப்பட்ட இடமல்ல. அது பரலோகத்தில் உள்ள வீடு. அது என்றென்றும் நிலைத்திருப்பது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 இப்பொழுது எங்கள் கண்களுக்குத் தெரிகின்றபடி, நாம் வாழும் பூமிக்குரிய கூடாரமாகிய நமது உடல் அழிந்துபோனாலும், நமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் ஒரு கட்டடம் உண்டு. அது மனித கைகளினால் கட்டப்படாத, பரலோகத்தில் உள்ள ஒரு நித்திய வீடு.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 நாம் வாழ்கின்ற தற்காலிக வீடாகிய இந்த பூமிக்குரிய கூடாரம் அழிக்கப்பட்டாலும், நமக்கு இறைவன் அளிக்கின்ற கட்டடமாகிய நித்திய வீடொன்று உண்டு. அது மனித கைகளால் கட்டப்படாததும், பரலோகத்தில் உள்ளதுமாக இருக்கின்றது என்பதை அறிந்திருக்கிறோம்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.

See the chapter Copy




2 கொரி 5:1

Follow us:

Advertisements


Advertisements