மாற்கு 1:45 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு45 ஆனால் அவனோ புறப்பட்டுப் போய், தனக்கு நடந்ததைக் குறித்து தாராளமாய் பேசத் தொடங்கி, அந்தச் செய்தியை எங்கும் பரப்பினான். அதன் காரணமாக, இயேசுவினால் ஒரு பட்டணத்திற்குள்ளும் வெளிப்படையாய் செல்ல முடியவில்லை, அவர் தனிமையான இடங்களிலேயே தங்கினார். ஆயினும் எல்லா இடங்களிலும் இருந்தும் மக்கள் அவரிடம் வந்தார்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்45 ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202245 ஆனால் அவன் புறப்பட்டுப்போய் தாராளமாய் பேசத்தொடங்கி, தனக்கு நடந்த செய்தியை எங்கும் பரப்பினான். இதன் காரணமாக, இயேசுவினால் ஒரு பட்டணத்திற்குள்ளும் வெளிப்படையாக செல்லமுடியாமல், வெளியே தனிமையான இடங்களிலேயே தங்கினார். ஆனால் எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். Se kapitletmārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)45 avanō pur̄apaɹtupōi, indha j̄angadhi engum viɹlangumbaɹdiyāha pirasitham paɹnna thordanginān. adhināl avar veɹliyarangamāi paɹtaɹnathil piravēsika kūɹdāmal, veɹliyē vanāndharamāna iɹdangaɹlil thangiyirundhār; ethisaiyilum irundhu janangaɹl avariɹdathitku vandhārhaɹl. Se kapitletபரிசுத்த பைபிள்45 அந்த மனிதன் அங்கிருந்து சென்று தான் கண்ட எல்லா மக்களிடமும் இயேசு தன்னைக் குணப்படுத்தியதைப் பற்றிச் சொன்னான். எனவே இயேசுவைப் பற்றிய செய்தி எங்கும் பரவியது. அதனால் இயேசுவால் ஒரு நகரத்துக்குள்ளும் வெளிப்படையாக நுழைய முடியவில்லை. மக்கள் இல்லாத இடங்களில் இயேசு தங்கி இருந்தார். இயேசு எங்கிருந்தாலும் அனைத்து நகரங்களில் இருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)45 அவனோ புறப்பட்டுப்போய்; இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். Se kapitlet |