லூக்கா 6:49 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு49 ஆனால் என் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றை நடைமுறைப்படுத்தாதவனோ, அத்திவாரமின்றி வெறும் தரை மீது வீட்டைக் கட்டிய மனிதனைப் போல் இருக்கின்றான். நீரோட்டம் அந்த வீட்டின் மேல் மோதியவுடனே, அது இடிந்து விழுந்து, முற்றிலும் அழிந்தது.” Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்49 என் வார்த்தைகளைக் கேட்டும் அதின்படி செய்யாதவன் எவனோ, அவன் அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாக இருக்கிறான்; நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதினவுடனே அது விழுந்து முழுவதும் அழிந்துபோனது” என்றார். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202249 ஆனால் என் வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாதவனோ, அஸ்திபாரமின்றி நிலத்திலே வீட்டைக் கட்டியவனைப்போல் இருக்கிறான். நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதிய உடனே அது இடிந்து விழுந்து, முற்றுமாய் ஒழிந்தது.” Se kapitletபரிசுத்த பைபிள்49 “ஆனால் என் வார்த்தையைக் கேட்டு, அவற்றின்படி செய்யாத ஒவ்வொரு மனிதனும் பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டாத மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான். வெள்ளப் பெருக்கின்போது அவ்வீடு எளிதில் இடிந்து போகும். அவ்வீடு முழுக்க நாசமாகிவிடும்” என்றார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)49 என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். Se kapitlet |