ரோமர் 4:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 இந்த ஆசீர்வாதம் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமா? இல்லையெனில் விருத்தசேதனம் பெறாதவர்களுக்கும் உரியதா? ஆபிரகாமின் விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது என்று நாம் சொல்கிறோம். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ? “ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறோமே. Se kapitletபரிசுத்த பைபிள்9 இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்கு மட்டும் வருவதில்லை. விருத்தசேதனம் செய்யாதவர்களுக்கும் வரும். ஆபிரகாமின் விசுவாசம் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவனும் நீதிமான் ஆனான். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 இந்த ஆசீர்வாதம் விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு மாத்திரமா? அல்லது விருத்தசேதனம் அற்றவர்களுக்கும் உரியதா? ஆபிரகாமின் விசுவாசமே அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது என்று நாம் சொல்கின்றோம். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே. Se kapitlet |