லூக்கா 1:22 - பரிசுத்த பைபிள்22 அப்போது சகரியா வெளியே வந்தான். ஆனால் அவர்களோடு பேச முடியவில்லை. அவன் ஆலயத்திற்குள் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். சகரியாவால் பேச முடியவில்லை. மக்களுக்குச் சைகைகளையே காட்ட முடிந்தது. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 அவன் வெளியே வந்தபோது, அவர்களோடு பேச அவனால் முடியவில்லை. அவன் அவர்களுக்கு சைகை காட்டியதால், அவன் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறான் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவன் பேசமுடியாதவனாகவே இருந்தான். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 அவர் வெளியே வந்தபோது, அவரால் அவர்களோடு பேச முடியவில்லை. அதனால் அவர் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவர் பேச முடியாதவராக இருந்தபடியால் அவர்களுடன் சைகை மூலமாக பேசினார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகைகாட்டி ஊமையாயிருந்தான். Se kapitlet |