அப்போஸ்தலர் 7:7 - பரிசுத்த பைபிள்7 ஆனால் அவர்களை அடிமையாக்கிய நாட்டினரை நான் தண்டிப்பேன்.’ தேவன் மேலும், ‘இந்தக் காரியங்கள் நடந்தபின் உன் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவர். பின் உன் மக்கள் இங்கு இந்த இடத்தில் என்னை வழிபடுவர்’ என்றார். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஆனால் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணிசெய்கிற அந்த நாட்டையோ நான் நியாயந்தீர்ப்பேன்.’ இறைவன் தொடர்ந்து, ‘அதற்குப் பின்பு அவர்கள் அந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டுவந்து, இந்த இடத்திலே என்னை வழிபடுவார்கள்’ என்றார். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஆயினும் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணி செய்கின்ற அந்த இனத்தை நான் நியாயம் தீர்ப்பேன்’ என்றும், ‘அதன்பின் அவர்கள் அந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டு வந்து இந்த இடத்திலே என்னை வழிபடுவார்கள்’ என்றும் கூறினார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார். Se kapitlet |