கலாத்தியர் 4:27 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு27 ஏனெனில், “குழந்தைப் பேறு அற்றவளான பெண்ணே, நீ சந்தோஷப்படு; பிரசவ வேதனையை அனுபவிக்காதவளே, நீ மகிழ்ச்சியுடன் சத்தமிடு; ஏனெனில், தன் கணவனுடன் வாழும் பெண்ணுக்கு இருப்பதைவிட, கைவிடப்பட்ட பெண்ணுக்கே அதிகமான பிள்ளைகள் இருக்கின்றார்கள்” என்று எழுதியிருக்கின்றதே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, மகிழ்ச்சியாக எழும்பி ஆர்ப்பரி; கணவன் உள்ளவளைவிட மலடியான பெண்ணுக்கே அதிக பிள்ளைகள் உண்டு என்று எழுதியிருக்கிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 ஏனெனில், “பிள்ளை பிள்ளைபெறாத மலடியே, சந்தோஷப்படு; பிரசவ வேதனைப்படாதவளே, மகிழ்ச்சியுடன் சத்தமிடு; ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனுடன் வாழ்கிறவளுடைய பிள்ளைகளைவிட அதிகமாயிருப்பார்கள்” என்று எழுதியிருக்கிறதே. Viz kapitolaபரிசுத்த பைபிள்27 கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது. “பிள்ளை பெறாத மலடியே! மகிழ்ச்சியாய் இரு. எப்போதும் நீ குழந்தை பெறாதவள். உனக்குப் பிரசவ வேதனை என்னவெனத் தெரியாது. அதனால் நீ மகிழ்ச்சியுடன் சத்தமிடு. கணவனுள்ள பெண்ணைவிட தனியாக இருக்கிற பெண்ணுக்கே அதிகப் பிள்ளைகள் உண்டு.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப்பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது. Viz kapitola |