ரோமர் 4:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 “உனது சந்ததிகள் வானத்து நட்சத்திரங்களைப்போல் அதிகமாயிருக்கும்” என்று இறைவன் ஆபிரகாமுக்குக் கூறியபோது யாரும் நம்புகிறதற்கு கூடாதிருந்தும் ஆபிரகாம் எதிர்பார்ப்புடன் விசுவாசித்தான். அதனால் ஆபிரகாம் அநேக நாடுகளுக்கு தந்தையானான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 “உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே,” தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்18 ஆபிரகாமுக்குப் பிள்ளைகள் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அவன் தேவனை நம்பினான். அதனால்தான் அவன் பல தேசத்து மக்களுக்கும் தந்தையானான். தேவன் “உனக்கு அநேக சந்ததிகள் ஏற்படும்” என்று சொன்னபடி ஆயிற்று. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 “உனது சந்ததி இவ்விதம் எண்ணிக்கைக்கு அடங்காமல் இருக்கும்” என்று அவருக்குக் கொடுக்கப்பட்ட வாக்கின்படியே, அநேக இனங்களுக்குத் தான் தந்தையாவேன் என்ற வாக்குறுதியில் நம்பிக்கை இழக்கக் கூடிய சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன் ஆபிரகாம் விசுவாசித்தார். அதனால் அநேக இனங்களுக்குத் தந்தையானார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். Viz kapitola |