மாற்கு 8:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 இயேசு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு, “இந்தத் தலைமுறையினர் ஏன் அடையாளத்தைத் தேடுகிறார்கள்? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இவர்களுக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படுவதில்லை” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார்கள் அடையாளம் தேடுகிறது ஏன்? இந்தச் சந்ததியார்களுக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவது இல்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)12 avar thammuɹdaiya āviyil perumūj̄u viɹtu: ‘indha j̄andhadhiyār aɹdaiyāɹlam thēɹduhir̄adhenna? indha j̄andhadhiyāruku oru aɹdaiyāɹlumum koɹdukapaɹduvadhillai yendru meiyāhave ungaɹluku j̄olluhir̄ēn,’ endru solli, Viz kapitolaபரிசுத்த பைபிள்12 இயேசு வருத்தத்தோடு பெருமூச்சு விட்டார். அவர், “எதற்காக மக்கள் அற்புதங்களை ஒரு ஆதாரமாகப் பார்க்க விரும்புகிறார்கள்? நான் உண்மையைக் கூறுகிறேன். அத்தகைய எந்த ஆதாரமும் உங்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது” என்று கூறினார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 அவர் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு, “இந்தத் தலைமுறையினர், அடையாளத்தைத் தேடுவது ஏன்? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இவர்களுக்கு எந்த அடையாளமும் கொடுக்கப்படுவதில்லை” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, Viz kapitola |