லூக்கா 16:31 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 “அப்பொழுது ஆபிரகாம் அவனிடம், ‘மோசேக்கும், இறைவாக்கினர்களுக்கும் அவர்கள் செவிகொடாவிட்டால், இறந்தவர்களிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்து போனாலும், அவர்கள் நம்பமாட்டார்கள்’ என்று சொன்னான்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார். Viz kapitolaபரிசுத்த பைபிள்31 “ஆனால் ஆபிரகாம் அவனை நோக்கி, ‘இல்லை! உனது சகோதரர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவி சாய்க்கவில்லை என்றால், இறந்தோரில் இருந்து வருகின்ற ஒருவன் கூறுவதையும் கேட்கமாட்டார்கள்’ என்றான்” என இயேசு கூறினார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 “அப்போது ஆபிரகாம் அவனிடம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் சொன்னதைக் கேட்பதற்கு அவர்கள் மனதற்றவர்களாக இருந்தால், இறந்தவர்களிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்து போனாலும்கூட, அவர்கள் நம்ப மாட்டார்கள்’ என்று சொன்னார்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார். Viz kapitola |