கலாத்தியர் 6:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஒருவன் தன்னுடைய மாம்ச இயல்புக்கு விதைத்தால், அந்த மாம்ச இயல்பிலிருந்து அழிவையே அறுவடையாகப் பெற்றுக்கொள்வான்; ஒருவன் பரிசுத்த ஆவியானவரைப் பிரியப்படுத்துவதற்காக விதைத்தால், அந்த பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடையாகப் பெற்றுக்கொள்வான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 பாவம் நிறைந்த தன் சுயத்தை திருப்தி செய்யும் பொருட்டு வாழத் தொடங்குவானேயானால், பாவம் நிறைந்த அவன் சுயமானது நிலையான மரணத்தையே தரும். ஆனால் பரிசுத்த ஆவியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு ஒருவன் வாழத் தொடங்குவானேயானால், அழிவற்ற வாழ்வை ஆவியானவரிடமிருந்து பெறுவான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 தன்னுடைய பாவ மனித இயல்புக்கு இசைவாக விதைக்கிற ஒருவன், பாவ மனித இயல்பிலிருந்து அழிவையே அறுவடை செய்வான். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் விருப்பத்தின்படி விதைக்கிற ஒருவனோ பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடை செய்வான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். Viz kapitola |