அப்போஸ்தலர் 25:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 அப்பொழுது பெஸ்து: “அகிரிப்பா அரசனே, எங்களோடு இங்கே இருக்கிறவர்களே, இவனை நீங்கள் பார்க்கிறீர்கள்; இவனைக் குறித்து எருசலேமிலும், இங்கே செசரியாவிலும் யூத சமூகத்தவர் யாவரும் என்னிடம், அவன் இனியும் உயிர் வாழக்கூடாது என்று சத்தமிட்டு முறையிட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடுகூட இந்த இடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனிதனைக்குறித்து யூதமக்களெல்லோரும் எருசலேமிலும் இந்த இடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது சரியில்லை என்று சொல்லிச் சத்தமிட்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்24 பெஸ்து, “அகிரிப்பா மன்னரும் இங்குள்ள எல்லோரும் இப்போது இம்மனிதனைப் பார்க்கிறீர்கள். இங்கும், எருசலேமிலுள்ள எல்லா யூத மக்களும் இவனுக்கெதிராக என்னிடம் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் குற்றங்களைக் கூறியபோது, அவனை இனிமேலும் உயிரோடு விட்டு வைக்கக்கூடாதென்று கூக்குரலிட்டனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 அப்போது பெஸ்து, “அகிரிப்பா அரசர் அவர்களே! இங்கே எங்களோடு இருப்பவர்களே! நீங்கள் அவதானிக்கின்ற இந்த மனிதனைக் குறித்து அனைத்து யூத சமூகத்தவர்களும் எருசலேமில் உள்ளவர்களும் இங்கே செசரியாவில் உள்ளவர்களும்கூட, என்னிடம் மனு சமர்ப்பித்து, ‘இவன் இனியும் உயிர் வாழக் கூடாது’ என்று கூக்குரலும் இட்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள். Viz kapitola |