எரேமியா 10:20 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னை விட்டுப்போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 என் கூடாரம் அழிந்துபோனது, என் கயிறுகளெல்லாம் அறுந்துபோனது; என் பிள்ளைகள் என்னை விட்டுப்போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 என் கூடாரம் அழிந்துவிட்டது. அதன் கயிறுகளும் அறுந்துபோயின. என் மகன்கள் என்னைவிட்டு போய்விட்டார்கள். அவர்கள் என்னிடம் இல்லை. இப்போது என்னுடைய கூடாரத்தைப் போடவோ, என் புகலிடத்தை அமைக்கவோ யாருமில்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்20 எனது கூடாரம் அழிக்கப்பட்டது. கூடாரக் கயிறுகள் எல்லாம் அறுபட்டன. எனது பிள்ளைகள் என்னை விட்டுவிட்டனர். அவர்கள் போய்விட்டார்கள். எனது கூடாரத்தை அமைப்பதற்கு எவனும் இருக்கவில்லை, எனக்கான இருப்பிடத்தை உருவாக்கிட யாரும் இல்லை. Viz kapitola |