எரேமியா 10:10 - பரிசுத்த பைபிள்10 ஆனால் கர்த்தர்தான் உண்மையான ஒரே தேவன். உண்மையில் ஜீவனுள்ள ஒரே தேவன் அவர்தான்! அவர் என்றென்றும் ஆளுகின்ற ராஜா! தேவன் கோபங்கொண்டால் பூமி அதிர்கிறது, தேசங்களிலுள்ள ஜனங்களால் அவரது கோபத்தை தாங்க முடியாது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 யெகோவாவோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய கடுங்கோபத்தை மக்கள் சகிக்கமாட்டார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 ஆனாலும், யெகோவாவே உண்மையான இறைவன். அவரே வாழும் இறைவன்; நித்திய அரசர். அவர் கோபங்கொள்ளும்போது பூமி நடுங்குகிறது. அவருடைய கடுங்கோபத்தை நாடுகள் தாங்கிக்கொள்ள மாட்டாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள். Viz kapitola |