1 பேது 3:21 - பரிசுத்த பைபிள்21 இன்று நீங்கள் இரட்சிக்கப்படுகின்ற ஞானஸ்நானத்திற்கு அந்தத் தண்ணீர் ஒப்பானது. ஞானஸ்நானம் சரீரத்திலிருந்து அழுக்கை விலக்குவதில்லை. ஆனால் தேவனிடம் தூய உள்ளத்தை வேண்டுவதே ஞானஸ்நானம். இயேசு கிறிஸ்து மரணத்தினின்று எழுப்பப்பட்டதால் இவை அனைத்தும் நடக்கின்றன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, சரீர அழுக்கை நீக்குவதாக இல்லாமல், தேவனைப் பற்றிக்கொள்ளும் நல்ல மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 அதற்கு ஒப்பான இந்த திருமுழுக்கு உடலில் அழுக்கை நீக்குவதற்கு அல்ல, அது இறைவனைப் பற்றும் தெளிவான மனசாட்சியுடன் இருப்போம் என செய்துகொள்ளும் வாக்குறுதியாகும். இந்த திருமுழுக்கு இப்பொழுது இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினாலே, உங்களை இரட்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 அதேபோல அந்த நீரானது உங்களை இப்போது இரட்சிக்கின்றதான ஞானஸ்நானத்திற்கு ஒரு முன் அடையாளமாக இருக்கின்றது. இந்த ஞானஸ்நானம் உடலில் அழுக்கை நீக்குவதற்காக அல்ல, மாறாக இறைவனைப் பற்றிக்கொள்கின்ற தெளிவான மனசாட்சியுடன் இருப்போம் என செய்துகொள்ளும் வாக்குறுதியாக இருக்கின்றது. இந்த ஞானஸ்நானமே இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினாலே உங்களை இரட்சிக்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. Viz kapitola |