கலாத்தியர் 3:5 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அன்றியும் உங்களுக்கு ஆவியானவரைக் கொடுத்து, உங்களுக்குள்ளே அற்புதங்களைச் செய்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே செய்கிறார்? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 இறைவன் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குக் கொடுக்கிறதும், உங்கள் மத்தியில் அற்புதங்களைச் செய்கிறதும், மோசேயின் சட்டத்தின் கிரியையினாலா, அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசிப்பதனாலா? Viz kapitolaபரிசுத்த பைபிள்5 நீங்கள் சட்டங்களைப் பின்பற்றுவதால் தேவன் உங்களுக்கு ஆவியைக் கொடுக்கிறாரா? இல்லை. நீங்கள் சட்டங்களைப் பின்பற்றுவதால் தேவன் உங்களிடம் அற்புதங்களைச் செய்கிறாரா? இல்லை. உங்களுக்கு அவர் ஆவியைக் கொடுத்ததும், அற்புதங்களை நடப்பித்ததும் நீங்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பினீர்கள் என்பதால்தான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 பரிசுத்த ஆவியானவரை இறைவன் உங்களுக்குத் தந்து, உங்கள் மத்தியில் அற்புதங்களைச் செய்வது நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களினாலா அல்லது நீங்கள் கேட்டதை நீங்கள் விசுவாசிப்பதனாலா? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்? Viz kapitola |