La Biblia Online

- Anuncios -




லூக்கா 5:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 அப்படியே, சீமோனின் பங்காளிகளான, செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்கூட வியந்து, பயமடைந்தார்கள். அப்போது இயேசு சீமோனிடம், “பயப்படாதே; இதுமுதல் நீ மீன்களைப் பிடிப்பது போல், மனிதர்களைச் சேர்ப்பவனாவாய்” என்றார்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இனி நீ மனிதர்களைப் பிடிக்கிறவனாக இருப்பாய் என்றார்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 சீமோனின் பங்காளிகளான செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்கூட வியப்படைந்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனிடம், “பயப்படாதே; இதுமுதல் நீ இறைவனுக்காக மனிதரைப் பிடிப்பவனாவாய்” என்றார்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

10 செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் கூட ஆச்சரியம் அடைந்தார்கள். (யாக்கோபும் யோவானும் பேதுருவுடன் சேர்ந்து உழைத்தனர்) இயேசு சீமோனை நோக்கி, “பயப்படாதே! இப்போதிலிருந்து மனிதரை ஒன்று சேர்க்கும்படியாக நீ வேலை செய்வாய், மீனைப்பிடிக்க அல்ல!” என்றார்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.

Ver Capítulo Copiar




லூக்கா 5:10

Síguenos en:

Anuncios


Anuncios