La Biblia Online

- Anuncios -




எபேசியர் 2:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 நமது பாவ மனித இயல்பிலிருந்து எழும் ஆசைகளின்படி வாழ்ந்து, எமது உடலிலும் சிந்தனையிலும் இருந்து எழுகின்ற இச்சைகளைத் தீர்த்துக் கொள்கின்றவர்களாக ஒரு காலத்தில் நாம் எல்லோரும் அவர்களிடையே வாழ்ந்து வந்தோம். அவர்களைப் போலவே நாமும் இறைவனுடைய கோபத்துக்கு உட்பட்டவர்களாய் இருந்தோம்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 அவர்களுக்குள்ளே நாமெல்லோரும் முற்காலத்திலே நமது சரீர விருப்பத்தின்படியே நடந்து, நமது சரீரமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபத்தின் பிள்ளைகளாக இருந்தோம்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 ஒருகாலத்தில் நாம் எல்லோரும் அவர்களிடையே வாழ்ந்தோம். நமது மாம்சத்திலிருந்து எழும் இச்சைகளைத் தீர்த்துக்கொள்கிறவர்களாகவும், மாம்சத்திலிருந்து எழும் ஆசைகளின்படியும் யோசனைகளின்படியும், நடக்கிறவர்களாகவும் இருந்தோம். மற்றவர்களைப் போலவே, இறைவனுடைய கோபத்துக்கு உட்பட்டவர்களாய் இருந்தோம்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

3 கடந்த காலத்தில் நாம் அனைவரும் அவர்களைப் போலவே வாழ்ந்தோம். நமது மனவிருப்பப்படி பாவத்தில் வாழ்ந்தோம். நமது மனமும் சரீரமும் விரும்பியதையே நாம் செய்தோம். நாம் தீயவர்களாய் இருந்தோம். நமது வாழ்க்கை முறையின் காரணமாக தேவனின் கோபத்தால் நாம் துன்பப்பட வேண்டும். மற்ற அனைத்து மக்களைப் போலவே நாமும் இருந்தோம்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

Ver Capítulo Copiar




எபேசியர் 2:3

Síguenos en:

Anuncios


Anuncios