அப்போஸ்தலர் 12:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 அவர்கள் முதலாம் காவலர் நிலையத்தையும் இரண்டாம் காவலர் நிலையத்தையும் கடந்து பட்டணத்திற்குப் போகின்ற இரும்பு வாசற்கதவு வரை வந்தார்கள். அப்போது அது தானாகவே திறந்து அவர்களுக்கு வழிவிட்டது. அவர்கள் அதற்கூடாகக் கடந்து வெளியே போனார்கள். அவர்கள் ஒரு வீதியின் ஊடாக நடந்து சென்றபோது திடீரென அந்தத் தூதன் பேதுருவைவிட்டுச் சென்றான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் காவல்களைக் கடந்து, நகரத்திற்குப்போகிற இரும்புக் கதவின் அருகே வந்தபோது அது தானாக அவர்களுக்குத் திறந்தது; அதன்வழியாக அவர்கள் புறப்பட்டு ஒரு வீதிவழியாக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனைவிட்டுப் போய்விட்டான். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 அவர்கள் முதலாம் காவலையும் இரண்டாம் காவலையும் கடந்து, பட்டணத்திற்குப் போகின்ற இரும்பு வாசற்கதவுவரை வந்தார்கள். அப்போது அது தானாகவே திறந்து, அவர்களுக்கு வழிவிட்டது. அவர்கள் அதின் வழியாகச் சென்றார்கள். அவர்கள் ஒரு வீதியின் முழுப் பகுதியையும் நடந்து சென்றபோது, திடீரென அந்தத் தூதன் பேதுருவைவிட்டுப் போனான். Ver Capítuloபரிசுத்த பைபிள்10 பேதுருவும் தேவதூதனும் முதல் காவலனையும் இரண்டாம் காவலனையும் கடந்தனர். நகரத்திலிருந்து அவர்களைப் பிரித்த பெரிய இரும்புக் கதவருகே வந்தனர். அந்தக் கதவு தானாகவே அவர்களுக்காகத் திறந்தது. பேதுருவும் தேவ தூதனும் கதவின் வழியாகச் சென்று அடுத்த தெரு வரைக்கும் நடந்தார்கள். அப்போது திடீரென தேவதூதன் மறைந்தான். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இரும்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான். Ver Capítulo |