ரோமர் 3:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 இவ்விதமாய் நம்முடைய அநீதி இறைவனுடைய நீதியை அதிகமாய்த் தெளிவுபடுத்தப்படுகிறது என்று சொன்னால், நாம் என்ன சொல்லுவோம்? அப்பொழுது இறைவன் நம்மேல் தமது கோபத்தை வரப்பண்ணினால், இறைவன் அநீதியுள்ளவர் என்று சொல்லலாமா? நான் இதை மனித வழக்கமாகவே வாதாடுகிறேன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 நான் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியைக் காண்பித்தால் என்னசொல்லுவோம்? கோபத்தைக் காட்டுகிற தேவன் அநீதி உள்ளவராக இருக்கிறார் என்று சொல்லலாமா? Ver Capítuloபரிசுத்த பைபிள்5 நாம் தவறு செய்யும்போது, தேவன் சரியானவர் என்று தெளிவாக அது காட்டிவிடும். எனவே தேவன் நம்மைத் தண்டிக்கும்போது அவர் நீதியில்லாதவர் என்று கூற முடியுமா? (சிலர் இவ்வாறு கூறுவதாக எண்ணுகிறேன்.) Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 ஆனால் இதை வைத்துக்கொண்டு, நம்முடைய தீய நடத்தையே இறைவனுடைய நீதியை நன்கு வெளிக் கொண்டுவருகின்றது என்று எவராவது கூறுவார்களானால் நாம் என்ன சொல்லுவோம்? மனித வழக்கத்தில் இதைக் கூறுவதானால், இறைவன் நம்மீது தமது கோபத்தை வெளிக்காட்டுகின்றபோது, அவர் அநீதியானவர் என்றும் சொல்லலாமா? Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? Ver Capítulo |