பிலிப்பியர் 2:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 அப்பொழுதுதான் நீங்கள் குற்றமற்றவர்களும், தூய்மையானவர்களுமான “பிழையேதுமில்லாத இறைவனுடைய பிள்ளைகளாய், நெறிகெட்ட சீர்கேடான இந்தத் தலைமுறையினரிடையே இருப்பீர்கள்.” அவர்களிடையே, நீங்கள் வான மண்டலங்களிலுள்ள நட்சத்திரங்களைப்போல் பிரகாசிப்பீர்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே குற்றம் இல்லாதவர்களும் கபடு இல்லாதவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக இருப்பதற்கு, Ver Capítuloபரிசுத்த பைபிள்15 அப்போதுதான் எதுவுமறியாதவர்களாகவும், எந்தத் தவறும் இல்லாதவர்களாகவும் இருப்பீர்கள். நீங்கள் தேவனுடைய குற்றமற்ற பிள்ளைகளாக இருப்பீர்கள். ஆனால் உங்களைச் சுற்றிலும் உள்ள பாவம் செய்கிற கெட்டவர்களோடு நீங்கள் வாழ்கிறீர்கள். அவர்களுக்கு மத்தியில் இருட்டின் நடுவில் விளக்குபோன்று பிரகாசிக்கிறீர்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 அப்போதுதான், “நெறிகெட்டதும் சீர்கெட்டதுமான இந்தத் தலைமுறையினரிடையே” வாழ்வின் வார்த்தையைப் பற்றிப்பிடித்தவர்களாய், இருண்ட உலகிற்கு ஒளிதரும் நட்சத்திரங்களைப் போல, நீங்கள் குற்றமில்லாதவர்களும் தூய்மையானவர்களுமாய் இறைவனுடைய களங்கமில்லாத பிள்ளைகளாகத் திகழ்வீர்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, Ver Capítulo |