தீத்து 2:14 - பரிசுத்த பைபிள்14 நமக்காக அவர் தன்னையே தந்தார். அக்கிரமங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க அவர் இறந்தார். நற்செயல்களை எப்பொழுதும் செய்ய ஆர்வமாக இருக்கும் அவருக்குச் சொந்தமான மக்களாகிய நம்மைப் பரிசுத்த மனிதர்களாக்க அவர் இறந்தார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 அவர் நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்து மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நல்லசெயல்களைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 எல்லாவித தீமைகளிலிருந்தும் நம்மை மீட்டு, நற்செயல்களைச் செய்ய ஆர்வமுள்ள தம்முடைய மக்களாகும்படி, நம்மைத் தமக்கென்று தூய்மைப்படுத்தி, தமக்குச் சொந்தமானவர்களாய் ஆக்கும்படியுமே, கிறிஸ்து தம்மையே நமக்காகக் கொடுத்தார். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 கிறிஸ்து நமக்காக தம்மையே கொடுத்தார். எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் நம்மை மீட்டு, நற்செயல்களைச் செய்வதற்கு ஆர்வமுள்ள அவருக்குச் சொந்தமான மக்களாகும்படி அவருக்கென்று தூய்மைப்படுத்தவுமே அவர் அப்படிச் செய்தார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். Ver Capítulo |