ரோமர் 5:10 - பரிசுத்த பைபிள்10 நாம் தேவனுக்குப் பகைவர்களாக இருந்தபோது, தேவனோ கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நம்மை நண்பர்களாக்கிக் கொண்டார். எனவே, இப்போது உறுதியாக நாமனைவரும் அவரது நண்பர்களே. தேவன் தனது குமாரனின் உயிர் மூலம் நம்மை இரட்சிப்பார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 நாம் தேவனுக்கு பகைவர்களாக இருக்கும்போது, அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோம் என்றால், ஒப்புரவாக்கப்பட்டப்பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 நாம் இறைவனுக்கு விரோதிகளாய் இருக்கும்போதே, அவருடைய மகனின் மரணத்தினாலே நாம் இறைவனோடு ஒப்புரவாக்கப்பட்டோமானால், இப்பொழுது இறைவனோடு நாம் ஒப்புரவாயிருக்கையில், கிறிஸ்துவின் ஜீவனினாலே நாம் இரட்சிக்கப்படுவது எவ்வளவு நிச்சயம்! Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 நாம் இறைவனுக்கு விரோதிகளாய் இருக்கும்போதே அவருடைய மகனின் மரணத்தின் மூலமாய் நாம் இறைவனோடு ஒப்புரவாக்கப்பட்டோமானால், இப்போது இறைவனோடு நாம் ஒப்புரவாயிருக்கையில், கிறிஸ்துவின் வாழ்வின் மூலமாக நாம் மீட்கப்படுவது எவ்வளவு நிச்சயம்! Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. Ver Capítulo |