ரோமர் 3:4 - பரிசுத்த பைபிள்4 உலகில் உள்ள அத்தனை மக்களும் பொய்யராகிப் போனாலும் தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராகவே இருப்பார். “நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவராய் விளங்குவீர். உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடைவீர்” என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அப்படியாக்காது: “நீர் உம்முடைய வசனங்களில் நீதிமானாக விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியானது” என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியவான் என்றும், எந்த மனிதனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 ஒருபோதும் இல்லை! மனிதர்கள் அனைவரும் பொய்யராக இருந்தாலும் இறைவனோ உண்மையுள்ளவராய் இருக்கிறார். “நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவர் என்றும், நீர் நியாயம் விசாரிக்கும்போது உமது தீர்ப்பு வெற்றியடையும் என நிரூபிக்கப்படுகிறது” என்று எழுதியிருக்கிறதே. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 ஒருபோதும் அப்படி ஆகி விடாது! ஏனெனில் எழுதியிருக்கின்றபடி, “நீர் பேசும்போது நீதியுள்ளவர் என்பது புரியவும், நியாயம் விசாரிக்கும்போது வழக்கில் நீர் வெற்றி அடையவும்” மனிதர்கள் அனைவரும் பொய்யராகிப் போனாலும், இறைவனே உண்மையுள்ளவர் என்பது தெளிவாகட்டும். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. Ver Capítulo |