யாக்கோபு 4:12 - பரிசுத்த பைபிள்12 சட்டத்தை உருவாக்கியவர் ஒரே ஒருவரே இருக்கிறார். அவர் தேவனாவார். சட்டத்தையே கேள்விக்குட்படுத்தினால், சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமகனாக இருப்பதை விட்டு நீ நீதிபதியாகிறாய் என்பது பொருளாகும். சட்டத்தைக் காப்பாற்றவும், அழிக்கவும் அதிகாரம் கொண்டவர் அவர் ஒருவரே. எனவே உன் சகோதரனையும் சகோதரியையும் நீ தான் நியாயம் தீர்க்க வேண்டும் என நினைக்க நீ யார்? Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவரும் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 இறைவன் ஒருவரே சட்டத்தைக் கொடுத்தவரும், நியாயந்தீர்ப்பவருமாய் இருக்கிறார். அவரே நம்மை இரட்சிக்கவும், அழிக்கவும் வல்லவராய் இருக்கிறார். அப்படியிருக்க, உங்கள் அயலவனை நியாயந்தீர்க்க நீங்கள் யார்? Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 ஒருவரே சட்டத்தைக் கொடுக்கின்றவரும், நீதிபதியுமாய் இருக்கின்றபடியால், அவரே நம்மை இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவராய் இருக்கின்றார். அப்படியிருக்க, உங்கள் அயலவனை நியாயம் தீர்க்க நீங்கள் யார்? Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? Ver Capítulo |